Friday, March 19, 2021

பாம்பே டைம்ஸ் - பாகம் 9

 பாம்பே டைம்ஸ் - பாகம் 9


என்னடா இதுபாம்பே போல ஒரு நவநாகரிகமான நகரத்துல பொறந்துவளர்ந்துதுபாய் போல பல நாடுகளப்பார்த்த கண்ணா அண்ணா என்னிக்கும்இல்லாத மாதிரிபாவாடச்சட்ட போட்டதுக்கு இப்பிடி கத்தறார்னுநானும் தான்கொஞ்சம் குழம்பினேன்அப்பறமா மன்னிதான் அண்ணா கிட்ட தனியா போய்கேட்டுட்டு வந்துசிரிச்சிண்டே சொன்னா, “நம்ம இப்போ போற இடத்தில (fair) giant wheel இருக்கும்நீ அதுல இந்த மாதிரி dress எல்லாம் போட்டுண்டு போனாநன்னா இருக்காதுபொறுக்கி பசங்க எல்லாம் வருவாஏதானும் ஏடாகூடமாஅவா comment பண்ணுவாளோன்னு தான் அண்ணா பயப்படறார்உன் கிட்டசொல்ல தயங்கறார்” னுமன்னி சொல்லி முடிக்கல எனக்குஎன்னையும் அறியாமஅண்ணா மேல இருந்த அன்பும்பாசமும் பல மடங்கா உயர்ந்ததுஅண்ணாக்களால மட்டும் தான் தங்கைகளுக்காக இவ்வளவு கவலப்பட முடியும்அந்த நிமிக்ஷம் நான் நெனச்சது, “ இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும்கண்ணா அண்ணா தான் எனக்கு அண்ணாவா பிறக்கணும்! What a beautiful soul!!


ரொம்ப ஆர்வமா படிக்கிற நேயர்களுக்கு - அன்னிக்கு நான் அந்த dress  தான்fairக்கு போனேன்ஆனாஅண்ணா கவலப்படக்கூடிய எந்த விஷயமும் செய்யலஎவ்வளவு சவால் விடற நான்எப்படி இவர் அன்புக்கு கட்டுப்பட்டேன்!


அப்போ எனக்கும்ஜெயனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்ததுஜெயன்Malaysia வுல இருந்தார்அப்போ தினமும் phone boothக்கு நான் போய் அவரக்கூப்பிட்டு பேசுவேன்இல்ல அவர் வீட்டு நம்பருக்கு phone பண்ணுவார்அண்ணாஎன்ன நல்லா கிண்டல் செய்வார்ஒரு நாள்ஏதேச்சியா என்ன கேட்டார், “உனக்கு சமைக்கத் தெரியுமா?” ன்னுநான், “இல்லண்ணாஎனக்கு சமையல்லinterest இல்ல” அப்பிடின்னேன்அன்னிலேர்ந்து தினமும், “ஜெயஶ்ரீஇஸ்கோகுச் சிக்காயோ யார்” மன்னிக்கு உபதேசம்கூடவே என் கிட்ட, “நீ ஒண்ணும்சமைக்கல்லேன்னா உன் ஜெயட்டா என்ன சாப்பிடுவார்?” அப்போவே அண்ணாகவலப்பட ஆரம்பிச்சுட்டார் அவரோட வருங்கால மாப்பிள்ளைக்காக!


வாரக்கடைசில மன்னியோட Dadar நெறய shopping!


நடுவில ஒரு 4 நாள் எங்க ரெண்டு பேரையும் நாஸிக்ஷீர்டி வேற கூட்டிக்கிட்டுroad trip போனாங்கஅங்க ஒரு ரெண்டு நாள் நிம்மி ்அக்கா வீட்ல டேரா!!


எனக்கும் நித்யாவுக்கும் மாத்தி மாத்தி பூனா போயாகணும்னு ஆனப்போநாங்கபோயிட்டு ஆர்த்தர் 12 மணிக்கும் 1 மணிக்கும் வரும்போதுவேதி அத்தஎங்களுக்காக தயிர் சாதம் கலந்து வெச்சிட்டு காத்துக்கிட்டு இருப்பாங்கஇந்தகாலத்துல யாராவது செய்வாங்களாஅதுவும் மருமாளுக்கும்அவகூட்டாளிக்கும்என்ன நாங்க கொடுப்போம் அவங்க அன்புக்கு இணையாக?


இது மாதிரி 3 மாசம் போனதே தெரியலஏன்டா திரும்பி Madras போறோம்னுஇருந்தது. But all good things must come to an end! அது மாதிரிஎங்க பாம்பேவாசமும் ஜனவரி மாசம்பொங்கலுக்கு முன்னாடி ஒரு முடிவுக்கு வந்ததுபிரியவேமனசில்லாம அத்தைக்கும்அண்ணாவுக்கும்மன்னிக்கும் “bye bye” சொல்லிட்டுபாம்பேயோட பசுமையான நினைவுகளை சுமந்துண்டு, Madrasக்குதிரும்பினோம்!


(முற்றும்)


பிகு. 1: வேலைக்கு போனீங்களே அதுல ஏதாவது கத்துக்கிட்டீங்களான்னு சிலர்கேக்கறது என் காதுல விழறது! Of course!!


பிகு. 2: அத்த குடும்பத்த தவிரஅவங்க வீட்டுக்கு வெளியேநானும் நித்யாவும்அடிச்ச லூட்டிப்பத்தி எழுதினா இன்னும் நாலு பாகமாவது தேவப்படும்வாசகர்கள் நலம் கருதி அதெல்லாம் எழுதல


பிகு. 3: என் கதைல வந்த எல்லா கதாப்பாத்திரங்களும் இப்போ எங்கன்னுசொல்ல ஆவல்அதுக்கு இன்னும் ஒரு கொசுறு பாகம் அப்பறமா எழுதறேன்!


நன்றி!!!

No comments: